பின்னர் ஒரு பாலை நிலத்தை அடைதல் 2036. | அனையர், அப் புனல் ஏறினர்; அக்கரை அணைந்தார்; புனையும் வற்கலைப் பொற்பினர் நெடு நெறி போனார்; சினையும் மூலமும் முகடும் வெந்து, இரு நிலம் தீய்ந்து, நினையும் நெஞ்சமும் சுடுவது ஓர் நெடுஞ் சுரம் நேர்ந்தார். |
புனையும் வற்கலைப் பொற்பினர் - அணிந்து. கொண்டுள்ள மரவுரியாலாகிய அழகியஆடையுடைய அவர்கள்; அனையர் - அப்படிப்பட்டவர்களாய்; ஆப்புனல் ஏறினர் -அந்த யமுனை நீரைக் கடந்தார்; அக்கரை அணைந்தார் - எதிர்க்கரையைச்சென்றடைந்தார்கள்; நெடு நெறி போனார் - நீண்ட வழியைக் கடந்து சென்று; சினையும் மூலமும் முகடும் வெந்து - கிளைகளும் வேறும், உச்சியும் தீய்ந்து; இரு நிலம்தீய்ந்து - பெரிய நிலம் கருகி; நினையும் நெஞ்சமும் சுடுவது ஓர் நெடுஞ் சுரம் -நினைக்கின்ற மனமும் சுடுவதாகிய ஒரு பெரிய பாலை நிலத்தை; தேர்ந்தார் -அடைந்தார்கள். ‘வற்கலைப் பொற்பினர் அனையர்’ - எனக் கூட்டினும் அமையும். மூலம் என்பது கிழங்கு, அது வேரின்கண் உள்ளது; ஆதலின் வேர் என உரைக்கப்பட்டது. முகடு - மரத்தினது உச்சி, பூ, தளிர், காய், கனி இவை உள்ள பகுதி யாம். 38 |