2038. | வறுத்து வித்திய அனையன வல் அயில் பரல்கள், பறித்து வித்திய மலர் எனக் குளிர்ந்தன; பசைந்த; இறுத்து எறிந்தன வல்லிகள் இளந் தளிர் ஈன்ற; கறுத்த வாள் அரவு எயிற்றினூடு அமுது உகக் களித்த; |
வறுத்த வித்திய அனையன வல் அயில் பரல்கள் - நெருப்பில் வறுத்து விதைக்கப்பட்டன போன்ற கொடிய கூர்மையான பரற்கற்கள்; பறித்து வித்திய மலர் எனக்குளிர்ந்தன - பிடுங்கி விதைத்த மலர்களைப் போலக் குளிர்ச்சி அடைந்தன; பசைந்த-ஈரம் உடையவாயின; இறுத்து எறிந்தன வல்லிகள் - ஓடிக்கப்பட்டு எறியப்பட்ட கொடிகள்; இளந் தளிர் ஈன்ற - இளமையான தளிரைத் தந்தன; கறுத்த வாள் அரவு -சீறிய கொடிய பாம்பு; எயிற்றினூடு அமுது உகக் களித்த - பற்களின் இடையே இருந்துஅமுதம் சிந்தச் சீற்றம் நீங்கி மகிழ்ச்சி அடைந்தன. பரற்கற்கள் மலராக, காய்ந்த கொடிகள் தளிர் ஈன, பாம்பு நஞ்சு தராமல் அழுதம் சித்தஇவ்வாறு பாலை மாறியது என்பதாம். 40 |