2038.வறுத்து வித்திய அனையன
     வல் அயில் பரல்கள்,
பறித்து வித்திய மலர் எனக்
     குளிர்ந்தன; பசைந்த;
இறுத்து எறிந்தன வல்லிகள்
     இளந் தளிர் ஈன்ற;
கறுத்த வாள் அரவு எயிற்றினூடு
     அமுது உகக் களித்த;

     வறுத்த வித்திய அனையன வல் அயில் பரல்கள் - நெருப்பில்
வறுத்து விதைக்கப்பட்டன போன்ற  கொடிய கூர்மையான பரற்கற்கள்;
பறித்து வித்திய மலர் எனக்குளிர்ந்தன - பிடுங்கி விதைத்த
மலர்களைப் போலக் குளிர்ச்சி அடைந்தன; பசைந்த-ஈரம் உடையவாயின;
இறுத்து எறிந்தன வல்லிகள் - ஓடிக்கப்பட்டு எறியப்பட்ட கொடிகள்;
இளந் தளிர் ஈன்ற - இளமையான தளிரைத் தந்தன; கறுத்த வாள்
அரவு -
சீறிய கொடிய பாம்பு;  எயிற்றினூடு அமுது  உகக் களித்த -
பற்களின் இடையே இருந்துஅமுதம் சிந்தச் சீற்றம் நீங்கி மகிழ்ச்சி
அடைந்தன.

     பரற்கற்கள் மலராக,  காய்ந்த கொடிகள் தளிர் ஈன,  பாம்பு நஞ்சு
தராமல் அழுதம் சித்தஇவ்வாறு பாலை மாறியது  என்பதாம்.          40