204.ஆதியின் மனுவும் நின்
     அரிய மைந்தற்குப்
பாதியும் ஆகிலன்;
     பரிந்து வாழ்த்தும் நல்
வேதியர் தவப் பயன்
     விளைந்ததாம்’ என,
சேதியர் சிந்தனை
     தெரியச் செப்பினார்.

     ஆதியின் மனு - வைவஸ்வத மனு, சூரிய குல முன்னோன்; பரிந்து- அன்புகொண்டு; சேதியர் - சேதி நாட்டவர்.                   76-13