2041. | படர்ந்து எழுந்த புல், பசு நிறக் கம்பளம் பரப்பிக் கிடந்த போன்றன; கேகயம் தோகைகள் கிளர, மடந்தைமார் என, நாடகம் வயின்தோறும் நவின்ற; தொடர்ந்து பாணரின் பாங்கு இசை முரன்றன தும்பி; |
படர்ந்து எழுந்த புல் - தரைமீது பரவித் தோன்றிய புற்கள், பசுநிறக்கம்பளம் பரப்பிக் கிடந்த போன்றன - பச்சை நிறக் கம்பளம் ஒன்றை விரித்துப்போட்டாற் போல இருந்தன; கேகயம் - மயில்கள்; தோகைகள் கிளர - பீலிகல்அசைய; மடந்தைமார் என - பெண்களைப் போல; வயின் தொறும் - பக்கங்களில்எல்லாம்; நாடகம் நவின்ற - நடனம் பழகின; தும்பி - வண்டுகள்; தொடர்ந்து - (மயிலின் நடனத்தைத்) தொடர்ந்து; பாணரின் - இசைப் பாணர்களைப் போல; பாங்கு இசை முரன்றன - இதமான இசையை ஒலித்தன. பச்சைக் கம்பளம் பரப்பினதுபோல் புற்கள் படந்துள்ளன. மயில் நடனம் ஆட, வண்டுஇசைபாட வழி இனிதாயிற்று என்பதாம். 43 |