2041.படர்ந்து எழுந்த புல்,
     பசு நிறக் கம்பளம் பரப்பிக்
கிடந்த போன்றன; கேகயம்
     தோகைகள் கிளர,
மடந்தைமார் என, நாடகம்
     வயின்தோறும் நவின்ற;
தொடர்ந்து பாணரின் பாங்கு இசை
     முரன்றன தும்பி;

     படர்ந்து எழுந்த புல் - தரைமீது  பரவித் தோன்றிய புற்கள்,
பசுநிறக்கம்பளம் பரப்பிக் கிடந்த போன்றன - பச்சை நிறக் கம்பளம்
ஒன்றை விரித்துப்போட்டாற் போல இருந்தன;  கேகயம் - மயில்கள்;
தோகைகள் கிளர - பீலிகல்அசைய; மடந்தைமார் என - பெண்களைப்
போல;  வயின் தொறும் - பக்கங்களில்எல்லாம்;  நாடகம் நவின்ற -
நடனம் பழகின; தும்பி - வண்டுகள்; தொடர்ந்து - (மயிலின் நடனத்தைத்)
தொடர்ந்து;  பாணரின் - இசைப் பாணர்களைப் போல;  பாங்கு இசை
முரன்றன -
இதமான இசையை ஒலித்தன.

     பச்சைக் கம்பளம் பரப்பினதுபோல் புற்கள் படந்துள்ளன. மயில்
நடனம் ஆட,  வண்டுஇசைபாட  வழி இனிதாயிற்று  என்பதாம்.       43