2042. | காலம் இன்றியும் கனிந்தன கனி; நெடுங் கந்தம், மூலம் இன்றியும் முகிழ்த்தன, நிலன் உற முழுதும்; கோல மங்கையர் ஒத்தன, கொம்பர்கள்; - இன்பச் சீலம் அன்றியும், செய் தவம் வேறும் ஒன்று உளதோ? |
கனி - பழங்கள்; காலம் இன்றியும் - தாம் பழுக்க வேண்டிய காலம் இல்லாத போதும்; கனிந்தன - பழுத்தன; நெடுங் கந்தம் - பெரிய கிழங்குகள்; மூலம் இன்றியும் - தாம் தோன்றுதற்குரிய வேர் இல்லாமலும்; நிலன் உற முழுதும்முகிழ்த்தன - மண்ணில் பொருந்த ழுமுதும் தோன்றின; கொம்பர்கள் -பூங்கொம்புகள்; கோல மங்கையர் ஒத்தன - அழகுடைய பெண்களை ஒத்தவையாய்ப் பூத்துவிளங்கின; இன்பச் சீலம் அன்றியும் செய்தவம் வேறும் ஒன்று உளதோ? - இன்பத்தைத் தருதற்குரிய நல்ஒழுக்கமே அல்லாமல் செய்யக் கூடிய தவம் வேறு ஒன்றும் இருக்கின்றதா? மாலை வெம்மை மாறியதற்குக் காரணம் இராமலக்குவர்களது சீலமே அன்றி வேறில்லை.நல்லொழுக்கம் உடையார்க்கு எல்லாம் வாய்க்கும் என்பது கருத்து. 44 |