2043. | எயினர் தங்கு இடம் இருடிகள் இருப்பிடம் ஏய்ந்த; வயின் வயின்தொறும், மணி நிறக் கோபங்கள் மலர்ந்த; பயில் மரம்தொறும், பரிந்தன பேடையைப் பயிலும் குயில் இரங்கின; குருந்தம் நின்று அரும்பின முருந்தம். |
எயினர்தங்கு இடம் - வேடர்கள் தங்கும் குறிச்சிகள்; இருடிகள் இருப்பிடம்ஏய்ந்த - தவமுனிவர்களது தவச்சாலையைப் போல ஆயின; வயின் வயின்தொறும் -பக்க இடங்களில்எல்லாம்; மணி நிறக் கோபங்கள் மலர்ந்த - செம்மணி போன்றநிறமுடைய இந்திர கோபப் பூச்சிகள் தோன்றின; பயில் மரம் தொறும் -நெருங்கியுள்ளமரங்களில் எல்லாம்; பரிந்தன பேடையைப் பயிலும் -தம்மைப் பிரிந்து இரங்கினவாயபெண்குயில்களை அழைக்கின்ற; குயில் -ஆண்குயில்கள்; இரங்கின - இரங்கிக்கூவின; குருந்தம்- குருந்த மரங்கள்; முருந்தம்- மயிலிறகின் அடிபோல; நின்று அரும்பின - அரும்புகளைத்தந்தன. முருந்து - மயிலிறகின் அடி. அது குருந்த மரத்து அரும்புக்கு உவமை. பயிரும் என்றிருத்தல் சிறப்பு; சங்க நூல்களில் இதுவே சொல். 45 |