2065. | ‘மஞ்சு அளாவிய மாணிக்கப் பாறையில் மறைவ, செஞ்செவே நெடு மரகதப் பாறையில் தெரிவ. விஞ்சை நாடியர் கொழுநரோடு ஊடிய விமலப் பஞ்றசு அளாவிய சீறடிச் சுவடுகள் - பாராய்! |
விஞ்சை நாடியர் கொழுநரோடு ஊடிய - வித்தியாதர உலகத்தில் உள்ள மகளிர் தம்கணவரோடு ஊடல் கொண்டதனால்; விமலப் பஞ்சு அளாவிய சீறடிச் சுவடுகள் - (கோபத்தில்நடந்த) அவர்களது குற்றமற்ற செம்பஞ்சுக் குழம்பு தீட்டப் பெற்ற சிறிய பாதங்களின் சுவடுகள்;மஞ்சு அளாவிய மாணிக்கப் பாறையில் மறைவ - மேகங்கள் நெருங்கியுள்ள மலைமேல் உள்ளமாணிக்கப் பாறைகளில் மறைகின்றன; செஞ்செவே நெடு மரகதப் பாறையில் தெரிவ - செம்மை யாக நீண்ட பச்சை நிறமுள்ள மரகதப் பாறைகளில் நன்கு தோன்றுகின்றன; காணாய் -. செம்பஞ்சுக் குழம்பு பூசிய அடிச்சுவடுகள் நடந்து சென்று வழியில் செந்நிறமுள்ள மாணிக்கப்பாறையில் நிறவேற்றுமை இன்மையால் மறைந்து விடுகின்றன; அதே சுவடுகள் பச்சைநிறவேற்றமையால் மரகதப் பாறையில் நன்றாகத் தெரிகின்றன என்றவாறாகும். ஊடல் கொண்ட மகளிர்கணவரை வெறுத்தாற் போன்ற குறிப்புடன் பாறைமேல் நடந்து சென்றனர். ஆதலின் செம்பஞ்சுதீட்டிய அவர்களது பாதச் சுவடுகள் பாறையில் தெரிவனவும் மறைவனவும் ஆயின. செஞ்செவே - நேராக. 20 |