2066. | ‘கழித்த செம்பொனின் தொளைபுரை உந்தியின் துணையே! கொழித்த மா மணி அருவியொடு இழிவன, கோலம் அழித்து மேவிய அரம்பையர் அறல் புரை கூந்தல் கழித்து நீக்கிய கற்பக நறு மலர் - காணாய்! |
அழித்த செம்பொனின் தொளைபுரை உந்தியின் துணையே! - கழியாகச் செய்யப்பெற்றசெம்பொன்னால் ஆகிய தொளையை ஒத்திருக்கின்ற தொப்புளை உடைய இனிய வாழ்க்கைத்துணைவியே!; கோலம் அழித்து மேவிய அரம்பையர் - (அருவியில் நீராட வந்து)தம்முடைய பழைய கோலத்தைக் களைத்து நீராடிய அரம்பை மாதர்கள்; அறல்புரை கூந்தல் கழித்து நீக்கிய - தமதுத கருமணலை ஒத்த கூந்தலிலிருந்து எடுத்து எறிந்த; கற்பகநறுமலர் - கற்பக மரத்தின் மணமுள்ள மலர்கள்; மாமணி கொழித்த அருவியொடு இழிவன -சிறந்த இரத்தினங்களைக் கொழித்துக்கொண்டு வருகின்ற மலை அருவியோடு இறங்கிவருவனவற்றை; காணாய் -. கழியும் தொளையுமாகச் செம்பொன்னால் செய்தவை கொப்பூழுக்கு உவமையாம். தேவஉலகத்தில் உள்ள மாதர் கழற்றி எறிந்த மாலைகளை வானுற ஓங்கி வளர்ந்திருக்கின்ற மலைஅருவிகள் அடித்துக்கொண்டு வருகின்றன என்பது கருத்து. 21 |