2067. | ‘அறை கழல் சிலைக் குன்றவர் அகன் புனம் காவல் பறை எடுத்து, ஒரு கடுவன் நின்று அடிப்பது - பாராய்! பிறையை எட்டினள் பிடித்து, “இதற்கு இது பிழை” என்னா, கறை துடைக்குறும் பேதை ஓர் கொடிச்சியைக் - காணாய்! |
ஒரு கடுவன் - ஓர் ஆண் குரங்கு; அறை கழல் சிலைக் குன்றவர் அகன் புனம்காவல் பறை எடுத்து நின்று அடிப்பது - ஒலிக்கின்ற வீரக்கழலை அணிந்த வில்லை உடையமலைவாழ்நர்களது அகன்ற புனத்தைக் காவல் செய்ய வைத்திருக்கின்ற பறையை எடுத்துக் கொண்டு அடிப்பதனை; பாராய் -; பிறையை - இளம்பிறையை; எட்டினள் பிடித்து -கிட்டிப் பிடித்து; ‘இதற்கு இது பிழை’ என்னா - இப்பிறை மதிக்கு இக்களங்கம்இருப்பது தவறு என்று கருதி; கறை - களங்கத்தை; துடைக்குறும் -துடைத்துவிடுகின்ற; பேதை - சிறுமியாகிய; ஓர் கொடிச்சியை - ஒரு குறமகளை; காணாய் -. தினைப்புனத்துத் தினை கவர வரும் பறவைகளை ஓட்டக் குன்றவர் பறை வைத்திருப்பர். அப்பறையை ஓர் ஆண்குரங்கு எடுத்து அடிக்கிறது. அடுத்து ஒரு சிறிய குறமகள் பிறையைப் பிடித்துஅதன் களங்கத்தைத் துடைக்கின்றாளாம். இதனால் பிறைமதியை ஒட்டி மலை உயர்ந்துள்ளது என்றுசிறப்பித்தவாறு. 22 |