2072. | ‘மடந்தைமார்களில் திலதமே! மணி நிறத் திணி கல் தொடர்ந்த பாறையில், வேயினம் சொரி கதிர் முத்தம் இடம்தொறும் கிடந்து இமைப்பன, எக்கு இளஞ் செக்கர் படர்ந்த வானிடை, தாரகை நிகர்ப்பன - பாராய்!1 |
மடந்தைமார்களில் திலதமே! - பெண்களில் திலகம் போலச் சிறந்தவளே!; மணி நிறத்திணி கல் தொடர்ந்த பாறையில் - செம்மணியால் ஆகிய (சிவந்த) நிறத்தைஉடைய திணிந்த கல் பரவியிருக்கின்ற மலைப் பாறையில்; வேய் இனம் சொரிகதிர் முத்தம்- மூங்கில் கூட்டம் சொரிந்த ஒளிபடைத்த முத்துகள்; இடம் தொறும் கிடந்து இழைப்பன- அங்கங்கே (பாறைகளின் இடை இடையே) கிடந்து ஒளி வீசி விளங்குகின்றன; எக்குஇளஞ்செக்கர் வானிடை - மேலேறிப் படர்ந்த இளைய செவ்வானத்திடத்து; தாரகைநிகர்ப்பன - நட்சத்திரங்களை ஒத்து விளங்குகின்றன; பாராய்-. செம்மணிக் கற்பாறையில் இடையிடை பரவிச் சிதறிக் கிடக்கும் மூங்கில் முத்துக்கள்செவ்வானத்து விண்மீண்களைப் போல் உள்ளன. எக்குதல் - மேல் ஏறுதல் - இனி மிகுதல் என்னும்பொருள் உடைய தெலுங்குச் சொல் என்பது ஒன்று. 27 |