2073.‘குழவு நுண் தொளை வேயினும்,
     குறி நரம்பு எறிவுற்று
எழுவு தண் தமிழ் யாழினும்
     இனிய சொல் கிளியே!
முழுவதும் மலர் விரிந்த தாள்
     முருக்கு இடை மிடைந்த
பழுவம், வெங் கனல் கதுவியது
     ஒப்பன - பாராய்!

     நுண் தொளை குழுவும் வேயினும் - நுண்ணிய தொளை நிரம்பப்
பெற்ற புல்லாங்குழல்ஓசையினும்;  குறி நரம்பு எறிவு உற்று எழுவு
தண்தமிழ் யாழினும் -
ஓசையைக் குறித்து(எழுப்பவல்ல) நரம்புகளை (கை
விரல்களால்) தடவி எழுப்பப்படுகின்ற குளிர்ந்த இனிய யாழ்ஓசையினும்;
இனிய - இனிமையான; சொல் கிளியே - சொற்களைப் பேசுகின்ற
கிளிபோல்பவளே!; முழுவதும் மலர் விரிந்த தாள் முருக்கு - முற்றிலும்
பூக்கள் பூத்துள்ளஅடிமரத்தை உடைய முருக்க மரம்; இடை மிடைந்த
பழுவம்
- இடையே நெருங்கி உள்ள காடு; வெங் கனல் கதுவியது
ஒப்பன
- கொடிய நெருப்பினால் பற்றப்படுள்ளது போன்றவற்றை;பாராய்-.

     முருக்கமலர் செந்நிறம் உடையது ஆதலின், முழுதும் மலர் பூத்த
முருக்க மரம் நிரம்பியுள்ளகாடு தீப்பிடித்தது போலத் தோன்றுவது
இயற்கையாகும்.                                               28