2079. | ‘ஐவனக் குரல், ஏனலின் கதிர், இறுங்கு, அவரை மெய் வணக்குறு வேய் இனம் ஈன்ற மெல் அரிசி, பொய் வணங்கிய மா தவர் புரைதொறும் புகுந்து, உன் கை வணத்த வாய்க் கிள்ளை தந்து அளிப்பன - காணாய்! |
உன் கை வணத்த வாய்க் கிள்ளை - (சீதையே!) உன் கை போன்ற செந்நிறவாயினையுடைய கிளிகள்; ஐவனக் குரல் - மல நெல் கதிர்; ஏனலின் கதிர் -தினைக் கதிர்; இறுங்கு - சோளக் கதிர்; அவரை - அவரைகள்; மெய்வணக்குறு வேய் இனம் ஈன்ற மெல் அரிசி - உடலால் வளைவு பொருந்திய மூங்கிலிற் பிறந்தமென்மையான அரிசி ஆகியவற்றை; பொய் வணங்கிய மாதவர் - பொய்யை ஓட்டிய முனிவர்களது; புரைதொறும் - ஆசிரமக் குடில்கள் தோறும்; புகுந்து - நுழைந்து; தந்து அளிப்பன- கொடுத்து அன்பு செய்வனவற்றை; காணாய்-. வணங்கி - வணங்கச் செய்த - இங்குத் தோல்வியைக் குறித்தது; பொய்யைத் தோற்கடித்தமுனிவர்கள். கிளிகள் முனிவர்களுக்கு உணவு கொண்டுவந்து அன்புடன் கொடுத்து உதவுகின்றனஎன்றாராம். 34 |