இராமன் அந்தணரின் விருந்தினன்ஆதல்  

2082.இனைய யாவையும் ஏந்திழைக்கு
     இயம்பினன் காட்டி,
அனைய மால் வரை அருந் தவர்
     எதிர்வர, வணங்கி,
வினையின் நீங்கிய வேதியர்
     விருந்தினன் ஆனான் -
மனையில் மெய் எனும் மா தவம்
     புரிந்தவன் மைந்தன்.

     மனையில் - அரண்மனையில்;  மெய் எனும் மாதவம் புரிந்தவன்
மைந்தன் -
சத்தியம் என்னும் பெரிய தவத்தைச் செய்தவனாகிய
தயரதனுடைய மகனாகிய இராமன்;  இனையயாவையும் - இப்படிப்பட்ட
சித்திரகூட மலையின் பண்பு நலங்களை யெல்லாம்;  ஏந்து இழைக்கு -
உயர்ந்த அணிகலக்களை உடையாளாய சீதைக்கு;  இயம்பினன் காட்டி -
சொல்லிக் காண்பித்து; அனைய மால் வரை - அந்தப் பெரிய சித்திரகூட
மலையின்; அருந்தவர் - அரிய முனிவர்கள்; எதிர்வர - (தன்னை)
எதிர்வந்து  வரவேற்க; வணங்கி - (அவர்களை) வழிபட்டு;  வினையின்
நீங்கிய -
தவத்தால்  இரு வினையில்இருந்து  நீங்கியவர்களாகிய;
வேதியர் - அந்த வேதியர்களுக்கு;  விருந்தினன்ஆனான் -.

     வனம் சென்று தவம் செய்வாரினும் தயரதன் மேம்பட்டவன் என்பது
காட்ட ‘மனையின் மெய்எனும் மாதவம் புரிந்தவன்’ என்றார்.          37