3. கைகேயி சூழ்வினைப் படலம் 209. | வந்து மன் நகரில் தம்தம் வகைப்படும் உருவம் மாற்றி, சுந்தரத் தடந்தோள் மாந்தர் தொல் உருச் சுமந்து தோன்றாது, அந்தரத்து அமரர், சித்தர், அரம்பையர், ஆதி ஆக இந்திரை கொழுநற் போற்றி இரைத்துமே எய்தி நின்றார் |
மன் நகர் - அரச நகரம், அயோத்தி. அமரர், சித்தர், அரம்பையர் முதலியோர் வடிவம் மறைத்து மனித வடிவில் அயோத்தியில் வந்து நின்றார் என்பதாம்; இந்திரை - திருமகள். 75-1 |