2096. | என்று சிந்தித்து, இளையவற் பார்த்து, ‘இரு குன்று போலக் குவவிய தோளினாய்! என்று கற்றனை நீ இதுபோல்?’ என்றான் - துன்று தாமரைக் கண் பனி சோர்கின்றான். |
என்று சிந்தித்து- என்று இவ்வாறு நினைத்து; இளையவற் பார்த்து- இலக்குவனைப் பார்த்து; ‘இரு குன்று போலக் குவவிய தோளினாய்! - இரு மலைகளைப்போலப் பொருந்திய தோள்களை உடையவனே!; நீ இது போல் என்று கற்றனை? - நீஇவ்வாறு குடில் அமைப்பதற்கு எப்பொழுது கற்றுக் கொண்டாய்?;’ என்றான் - என்றுகேட்டவனாய்; துன்று தாமரைக் கண் பனி சோர்கின்றான் - நெருங்கிய தாமரை போலும்கண்கள் நீர் சிந்தப் பெறுகின்றவனாக ஆனான். இருவரும் ஒன்றாக வசிட்டர் பால் பயிலுதலின் இக்குடிசை அமைக்கும் கலையை என்று கற்றாய்?என்று இலக்குவனைப் பார்த்து மனம் நெகிழ்ந்து கூறினான் என்க. 51 |