4. நகர் நீங்கு படலம்

210.விழுந்து பார்மிசை,
     வெய்து உயிர்த்து, ஆவி சோர்ந்து,
எழுந்து, ‘என் நாயகனே!
     துயர் ஏது எனாத்
தெளிந்திலேன்; இது
     செப்புதி நீ’ எனா,
அழுந்தினாள்; பின்னர்
     அரற்றத் தொடங்கினாள்.

     வெய்து உயிர்த்து - வெப்பமாக மூச்சு விட்டு, பெருமூச்சு விடுதலாம்;
 அழுந்தினாள்- துன்பத்தில் மூழ்கினாள்.                       29-1