பரதன் திருமுகம் பெற்று மகிழ்தல் 2106. | என்று கூறலும், ஏத்தி இறைஞ்சினான், பொன் திணிந்த பொரு இல் தடக் கையால், நின்று வாங்கி, உருகிய நெஞ்சினான் துன்று நாள்மலர்ச் சென்னியில் சூடினான். |
என்றுகூறலும்- என்று தூதுவர் கூறிய உடனே; ஏத்தி-(பரதன் அத் திருமுகத்தக்)கொண்டாடி வணங்கி; பொன் திணிந்தபொரு இல் தடக்கையால்- பொன்னாற் செய்த அணிகளைஅணிந்த ஒப்பற்ற நீண்ட கைகளால்; நின்று- எழுந்து நின்று; வாங்கி-வாங்கிக்கொண்டு;உருகிய நெஞ்சினான்- (அன்பினால்) கரைந்த மனம் உடையனாய்; நாள்மலர் துன்று சென்னியில்- அன்றவர்ந்த மலர்கள் நெருங்கச் சூடப்பெற்ற தன்தலை மீது; சூடினான்- (அத்திருமுகத்தை)அணிந்துகொண்டான். பொன்னாற் செய்த அணி நெருக்கமாகச் கைகளில் இருத்தலின் கையைப் ‘பொன் திணிந்த’என்றார், ஏத்துதல், நின்று வாங்குதல், தலைமேற் கொள்ளுதல் பரதன் அன்பையும், மன்னன்சார்பில் வந்த திருமுகத்தின் பால் காட்டும் மதிப்பையும் காட்டும். 5 |