யாவரும் இராமனை வந்து அடைதல்  

2467.சேனை வீரரும், திரு நல் மா நகர்
மான மாந்தரும், மற்றுளோர்களும்,
ஏனை வேந்தரும், பிறரும், யாவரும்,-
கோனை எய்தினார் - குறையும் சிந்தையார்.

     சேனை வீரரும் - படைவீரர்களும்; திருநல் மாநகர் - செல்வம்
நிறைந்தநல்ல பெரிய அயோத்தி நகரில் உள்ள; மான மாந்தரும் -
பெருமை படைத்தவர்களும்; மற்றுளோர்களும் - வேறுள்ளவரும்; ஏனை
வேந்தரும்
- பிற அரசர்களும்; பிறரும்யாவரும்-; கோனை- இராமனை;
குறையும் சிந்தையார் - அழிந்து வருந்தும் மனம்உடையவராய்;
எய்தினார் - வந்தடைந்தார்கள்.

     மான மாந்தர் என்பதற்கு முன்பு கூறியாங்கு அமைச்சர்கள் எனினும்
அமையும். அனைவரும் துக்கத்தில் மூழ்கியவராய் இராமனை நெருங்கிவந்து
சேர்ந்தார்கள் என்க.                                           93