2113. | துளைமுகத்தின் சுருதி விளம்பின; உளை முகத்தின உம்பரின் ஏகிட, விளை முகத்தன வேலையின் மீது செல் வளை முகத்தன வாசியும் வந்தவே. | சுருதி- வேத ஒலி; துளை முகத்தின்- உள் துளையுடைய குழலின் மூலமாக; விளம்பின- ஒலிக்கப்பெற்றன; உளை முகத்தின- தலையாட்டம் பொருந்தியனவும்; உம்பரின் ஏகிட-ஆகாயத்தில் செல்வதற்கு; விளைமுகத்தன- வல்ல செலவினையுடையவும்; வேலையின் மீது செல்- கடலின் மீது, செல்லும் ஆற்றல் உடையனவும் (ஆகிய); வளை முகத்தன- வளைந்த முகத்தினைஉடைய; வாசியும்- குதிரைகளும்; வந்த- இப்படைக்குழுவில் வந்தன. “குழுவு நுண் தொளை வேய்” என்றார் முன்னும். (2073.) குதிரைப் படை வருணனையில் குழலிசைபற்றிய குறிப்பு ஏன் - விளங்கவில்லை. 12 |