212.உணர்வு ஏதும் இலாள் உரையால்
     உரை சால் குமரன் நெடு நாள்
புணரான் நிலம்; மா வனமே
     போவானேயாம்; என்னில்,
இணரே பொலி தார் நிருபா;
     இடரால் அயர்வாய்; இதுவும்
துணையோ? - துணைவா!’ என்றாள்;
     ‘துயரேல் ! துயரேல்!’ என்றாள்.

     குமரன் - இராமன்;  இணர் - பூங்கொத்து.                53-2