2122. | ‘ஏய்ந்த காலம் இது இதற்கு ஆம்’ என ஆய்ந்து, மள்ளர் அரிகுநர் இன்மையால், பாய்ந்த சூதப் பசு நறுந் தேறலால் சாய்ந்து, ஒசிந்து, முளைத்தன சாலியே. |
சாலி - செந்நெற் பயிர்கள்; ‘இதற்கு ஏய்ந்த காலம் இது ஆம்’ என ஆய்ந்து- இப்பயிரை விளைத்தற்கும், அறுத்தற்கும் பொருத்தமான காலம் இதுவாகும் என்று ஆராய்ந்து; அரிகுநர் - அரிகின்றவர்களாகிய; மள்ளர் இன்மையால் - உழவர்கள் அத்தொழில்புரிபவராய் இல்லாமையால்; பாய்ந்த - (பறிப்பார் இல்லாமையால்) சிந்தி அழிந்த; சூதப் பசு நறுந் தேறலால் - மாம்பழத்தின் நல்ல இனிய சாற்றினால்; சாய்ந்து- தலை சாய்ந்து; ஒசிந்து - வளைந்து அடி முறிந்து; முளைத்தன - (தம் தானியங்கள் கீழே விழ மீண்டும்) முளைத்தன. தேறல் - மது, இங்கு அது போன்ற மாம்பழச் சாற்றை உணர்த்தியது. காலம் கருதிப் பயிரைஅறுக்காத போது அவை மீண்டும் நிலத்திற் சிந்தி முளைத்ததாகக் கூறினார். மள்ளர்சோதித்தலின் அறுத்திலர் என்க. ‘ஏ’ ஈற்றசை. 21 |