213.‘ “சேல் ஆகிய மா முதல்வன்
     திரு உந்தியின் நீள் மலரின்-
மேல் ஆகிய நான்முகனால்,
     வேதங்களின் மா முறையின்-
பால் ஆகிய யோனிகளின்
     பல ஆம் வருணம் தருவான்,
நால் ஆகியது ஆம் வருணம்தனின்,
     முன் எமை நல்கினனால்.

     சேல் ஆகிய மா முதல்வன் - மீனாக அவதாரம் செய்த திருமால்;
முன் -முதல் வருணம், அந்தணர் பிறப்பில்.                      76-1