கொடி இழந்த நகர் காணல் 2131. | ‘அண்டம் முற்றும் திரிந்து அயர்ந்தாய்’ அமுது உண்டு போதி’ என்று, ஒண் கதிர்ச் செல்வனை. விண் தொடர்ந்து விலக்குவ போல்வன, கண்டிலன், கொடியின் நெடுங் கானமே, |
ஒண் கதிர்ச் செல்வனை - ஒளி படைத்த ஆயிரம் கதிர்களைத் தன் செல்வமாக உடைய கதிரவனை (நோக்கி); ‘அண்டம்முற்றும் - எல்லா உலகங்களும் அடங்க; திரிந்து அயர்ந்தாய் - (நீ) சுற்றிஅலைந்து சோர்ந்து போனாய்; அமுது உண்டு போதி - (எங்கள் நகரிலே) தங்கி உணவுஅருந்திச் செல்வாயாக; என்று -; விண்தொடர்ந்து - (அக் கதிரவன் ) செல்லும் வான்அளாவித் தொடர்ந்து சென்று; விலக்குவ போல்வன - (அப்பரிதியைத்) தடுப்பனபோல்வவாகிய; கொடியின் - (அயோத்தி நகரக்) கொடிகளின்; நெடுங்கானம் - பெரியகாட்டை; கண்டிலன் - (பரதன்) காணப்பெறாதன் ஆனான். அந்நகரத்துப் பலவிடங்களிலும் முன்பு கொடிகள் இருந்தமையும் இப்போது இல்லாமையும் கூறப்பட்டன. வானளாவக் கொடிகள் உயர்ந்திருப்பதும் தடுத்தாற்போலஅசைவதும், சூரியன் செலவைத் தவிர்த்துச் சோர்வு நீக்கி உண்டு இளைப்பாறிச் செல்ல நகர்க்கு அழைப்பதாகக் கற்பனை செய்யப்பெற்றது. இது தற்குறிப்பேற்றவணி. கானம் - கொடிகளின் மிகுதி- ‘காடு’ என்னும் பொருள் இங்கே தொகுதி எனப் பொருள்பட்டது, மரங்களில் தொகுதி காடு, ஆதலின் ‘ஏ’ ஈற்றசை. 30 |