பரிசிலர் பரிசில் பெறாதுள்ள நகரின் நிலை காணல்   | 2133. |  கள்ளை, மா, கவர் கண்ணியன் கண்டிலன்-  பிள்ளை மாக் களிறும், பிடி ஈட்டமும்,  வள்ளைமாக்கள், நிதியும், வயிரியர்,  கொள்டிள மாக்களின் கொண்டனர் ஏகவே, |  
      மா- வண்டுகள்; கள்ளை கவர் கண்ணியன் - தேனைஉண்கின்ற   மலர் மாலையைஅணிந்தவனாகிய பரதன்; வள்ளை மாக்கள்- (அரசனை   வாழ்த்திப் பாடும்) மங்கலவள்ளைப் பாடகரும்; வயிரியர் - யாழ் முதலிய   இயங்களாற் பாடுகின்றவர்களும்; பிடி ஈட்டமும்-பெண்யானைத்   திரளையும்; நிதியும் - செல்வத்தையும்; கொள்ளை மாக்களின்-   கொள்ளையடித்துக் கொண்டு போகின்ற திருடர்களைப்போல;    கொண்டனர் ஏக-பரிசிலாகப் பெற்றுக் கொண்டு செல்ல; கண்டிலன் -.      பிள்ளை, மா களிறும், பிடியும் என்று பிரித்துக் கன்றும், யானையும்,  பிடியும் எனவும்பொருள் உரைக்கலாம்.  வயிரியர் - பாணர் - வாத்திய  இசைஞர் என்பது பொருள். அளவறியாதுவாரிக்கொண்டு செல்வது திருடர்  இயல்பு. அதனை ஈண்டுப் பரிசிலர்க்கு உவமை ஆக்கினார்.            32  |