பரதனைக் கைகேயி அழைத்தல்  

2142.ஆய காலையில், ஐயனை நாடித் தன்
தூய கையின் தொழல் உறுவான்தனை,
‘கூயள் அன்னை; குறுகுதிர் ஈண்டு’ என,
வேய் கொள் தோளி ஒருத்தி விளம்பினாள்.

     ஆய காலையில் - அந்தச் சமயத்தில்; ஐயனை நாடி - தந்தையைத்
தேடி; தன் தூய கையின் - தன் தூய்மையான கைகளால்; தொழல்
உறுவான்தனை
- தொழுதற்குவிரைந்துகொண்டிருக்கும் பரதனை நோக்கி;
வேய்கொள் தோளி ஒருத்தி - மூங்கில் அனையதோள் உடைய
(கைகேயியின்) ஏவல் மகள் ஒருத்தி; ‘அன்னை கூயன் - ‘உங்கள் தாய்
கைகேயி கூப்பிட்டாள்; ஈண்டுக் குறுகுதிர்’ - இங்கு வருக; என
விளம்பினாள்
-என்று கூறினாள்.

     இராமபிரானைத் தொழுங் கையாதலின் தூய கை என்றார் எனலாம்.
குறுகுதிர் -உயர்வொருமை.                                     41