துயர் மிகுதியால் பரதன் புலம்புதல் 2148. | எழுந்தனன், ஏங்கினன்; இரங்கிப் பின்னரும் விழுந்தனன்; விம்மினன்; வெய்து உயிர்த்தனன்; அழிந்தனன்; அரற்றினன்; அரற்றி, இன்னன மொழிந்தனன், பின்னரும் - முருகன் செவ்வியான்; |
முருகன் செவ்வியான்-முருகனை ஒத்த பேரழகு உடைய பரதன்; ஏங்கினன் எழுந்தனன்- (விழுந்து கிடந்ததரையில்இருந்தும்) ஏக்க முற்று எழுந்து; இரங்கி - மனம் வருந்தி; பின்னரும் விழுந்தனன்- மீண்டும் கீழ்விழுந்து; விம்மினன் - மனம் பொருமித்துடித்து; வெய்து உயிர்த்தனன் வெப்பமாகப் பெருமூச்சு விட்டு; அழிந்தனன் - மனம் கெட்டு; அரற்றினன் - பல படியாகப் பிதற்றலானான்; அரற்றி - புலம்பி; பின்னரும் - பிறகு; இன்னனமொழிந்தனன் - இவ்வாறு பேசலானான். முருகன் - அழகன். முருகு என்னும் சொற்கு அழகு, மணம், இளமை, கடவுள் தன்மை என்னும்நான்கு பொருள் உண்டு. முருகன் மணம் கமழ் தெய்வத்து இள நலம்“ (திருமுருகு290) உடையன்ஆதலின் பரதனுக்கு உவமையாயினன், ‘இன்னன்’ என்பதனைப் பின்வரும் ஒன்பது செய்யுள்கள் விரிக்கும் . 47 |