பரதன் தயரதனை நினைத்து முன்னிலைப்படுத்தி அரற்றுதல் 2149. | ‘அறம்தனை வேர் அறுத்து, அருளைக் கொன்றனை, சிறந்த நின் தண்ணளித் திருவைத் தேசு அழித்து, இறத்னை ஆம் எனின், இறைவ! நீதியை மறந்தனை; உனக்கு, இதின் மாசு மேல் உண்டோ? |
‘இறைவ! - தயரத மன்னனே!; அறம்தனை வேர் அறுத்து - தருமத்தை வேரோடேஅழித்து; அருளைக் கொன்றனை - அருளை உயிர் போக்கி; சிறந்த நின் தண் அளித்திருவைத் தேசு அழித்து - உயர்ந்து சிறந்த நின் குளிர்ந்த கருணைச் செல்வத்தை ஒளிகெடுத்து; இறந்தனை ஆம் எனின் - இறந்து பட்டாய் என்றால்; நீதியை மறந்தனை- நீதியை மறந்துவிட்டாய் ஆனாய்; உனக்கு -; இதின் - இதனைக் காட்டிலும்; மாசு- குற்றம்; மேல் உண்டோ - மேம்பட்ட துண்டோ?’ தயரதன் இறந்தபடியால் உலகில் அறம்காப்பார் இல்லாமையால் அறம் கெட்டது. தயரதன்இறப்பே அறம், அருள், ஒளி இவற்றை உலகில் நில்லாதபடி செய்துவிட்டது என்பது இதனாற்கூறியது. எனவே, தயரதன் ஆட்சிச் சிறப்புப் புலப்படுகிறது. “திருவுடை மன்னரைக் காணில்திருமாலைக் கண்டேனே” (திவ்வியப்-3271) என்பராதலின் அரசனை ‘இறைவ!’ என்றான். வள்ளுவரும் ‘இறைமாட்சி’ என்றது காண்க. தயரதன் இறவாதிருந்து இவற்றையெல்லாம் பழித்தாற்போலப் புகழையே கூறினானாம். 48 |