2155. | ‘இயம் கெழு தானையர் இறுத்த மாத் திறை, உயங்கல் இல் மறையவர்க்கு உதவி, உம்பரின், அயம் கெழு வேள்வியோடு, அமரர்க்கு ஆக்கிய, வயங்கு எரி வளர்க்கலை, வைக வல்லையோ? |
(ஐயா!) இயம்கெழு தானையர் - வாத்தியங்கள் நெருக்கி இருக்கின்ற சேனையைஉடையவர்; இறுத்த - (உனக்குத் தோற்று)கப்பமாகக் கட்டிய; மா திறை -பெரிய திறைப் பொருளை; உயங்கல்இல் - அ வருந்துதல் இல்லாத; மறையவர்க்கு -வேதம் வல்ல அந்தணார்க்கு;உதவி- கொடுத்து; உம்பரின் - விண்ணுலகில் உள்ள தேவர்கள்நலத்தின் (பொருட்டாகச் செய்யப் பெறும்); அயம் கெழு வேள்வியோடு-குதிரையைக் கொண்டு செயப்பெறும் அசுவமேத யாகத்துடனே; அமரர்க்கு ஆக்கிய - தேவர்களுக்காக விதித்த; வயங்கு எரி -விளங்குகின்ற (காருகபத்தியம் முதலிய) யாகஅக்கினி காரியங்களையும்; வளர்க்கலை - (முன்பு இடையறாது செய்து வந்தாய்; இப்போதுஅவற்றைச்) செய்யாமல்; வைகவல்லையோ - சோம்பித் தங்கியிருக்க மாட்டுவையோ. மறையவர்க்கு உதவலும், யாகங்கள் செய்தலும், பூசுரரையும், சுரரையும் காத்தற் பொருட்டு, இரண்டனையும் இடையறாது செய்த தயரதன் விண்ணுலகில் எதுவும் செய்யாமல் எவ்வாறு இருக்க இயலும்என்று எண்ணிப் புலம்பினான் என்க. அயம் - அஜம் என்னும் வடசொல். குதிரை. ‘வாம்பரிவேள்வி’ (271) என்று முன்னும் கூறியது காண்க. 54 |