216.இம் மா மொழி தந்து அரசன்
     இடர் உற்றிடுபோழ்தினில், அச்
செம் மா மயில் கோசலையும்,
     திகையா, உணர்வு ஓவினளால்;
மெய்ம்மாண் நெறியும், விதியின்
     விளைவும், தளர்வின்றி உணரும்
அம்மா தவனும் விரைவோடு
     அவலம் தரு நெஞ்சினனாய்.

     ஓவினள் - ஒழிந்தாள்;  மாதவன் - வசிட்டன்               87-1