கைகேயியின் மறுமொழி  

2164. ‘குருக்களை இகழ்தலின் அன்று; கூறிய
செருக்கினால் அன்று; ஒரு தெய்வத்தாலும் அன்று;
அருக்கனே அனைய அவ் அரசர் கோமகன்
இருக்கவே, வனத்து அவன் ஏகினான்’ என்றான்.

     ‘(இராமன் காடுபோயது) ‘குருக்களை - பெரியோரை; இகழ்தலின்
அன்று
-பழித்ததனால் அன்று; கூறிய- முன்பு நீ கூறிய; செருக்கினால்-
அளவின்மிக்க கர்வச் செயலாலும் அன்று; ஒரு
தெய்வத்தானும்அன்று-
ஓர் தெய்வக்குற்றத்தால் அத்தெய்வம் சீறியதாலும் அன்று; அருக்கனே
அனைய
-சூரியனையே ஒத்த (நேர்மை தவறாத); அவ்அரசர்
கோமகன்
- அந்தச்சக்கரவர்த்தியாகிய தயரதன்; இருக்கவே - உயிருடன்
இருக்கின்ற போதே; அவன் வனத்துஏகினான்’-இராமன் காட்டுக்குச்
சென்றான்;’ என்றாள் -.

     முன்பு பரதன் வினாவில் வந்த மூன்று காரணங்களையும் அன்று என
மறுத்தாள் கைகேயி. ‘குருக்களை இகழ்தல்’ -‘தீங்கு இழைத்த அதனினோ’
என்பதுடுனும், ‘ஒருதெய்வத்தால்’ என்பது ‘தெய்வம் சீறியோ’ என்பதுடனும்,
‘செருக்கினால்’ என்பது ‘ஓங்கியவிதியினோ’ என்பதுடனும் பொருந்துமாறு
அறிக.

     வாய்மை தவறாதவன் தயரதன்; தன் உயிர் போய்விடும் என்பது
தெரிந்தும் கைகேயிக்குவாக்குத் தவறாமல் வரம் கொடுத்தவன் ஆதலால்,
‘அருக்கனே அனைய’ என்று தயரதனை இங்குக்கூறினாள். பரதன் கேட்ட
வினாக்களின் அளவே கைகேயி பதில் உரைக்கிறாள்; மேற்கொண்டுதானாக
எதுவும் சொல்லாதில்லை;  ஏன்? பரதன்பால் தான் செய்த செயலை உடன்
தெரிவிப்பதில்எழுந்த அச்சமே ஆகும்.                           63