| 2168. | துடித்தன  கபோலங்கள்; சுற்றும் தீச் சுடர்  பொடித்தன மயிர்த் தொளை; புகையும் போர்த்தது;  மடித்தது வாய்; நெடு மழைக் கை, மண் பக  அடித்தன, ஒன்றொடு ஒன்ற அசனி அஞ்சவே. |  
      சுபோலங்கள் - கன்னங்கள்; துடித்தன - துடித்துக்கொண்டிருந்தன;  மயிர்த் தொளை - மயிர்க்கால் கண்களில்;  சுற்றும் - எப்பக்கமும்;  தீச்சுடர் - நெருப்புப் பொறிகள்; பொடித்தன - அரும்பின; புகையும்  போர்த்தது - புகை கிளம்பி (நாற்புறமும்) மூடிற்று; வாய் மடித்தது - வாய்  மடித்துக்கொண்டது; மழை நெடுங்கை - மழை போன்ற வள்ளன்மையுடைய  நீண்ட கைகள்; அசனி அஞ்ச - இடியும் அஞ்சும்படி (பெரிய ஒலி  உண்டாகும்படி); மண்பக ஒன்றொடு ஒன்றுஅடித்தன - பூமி வெடிக்கும்படி  ஒரு கையோடு ஒரு கை மோதி அடித்தன.      கன்னம் துடித்தல், மயிர்க்கால் மூலம் வெப்பம் பரவல், வாய் மடித்தல்,  கையை அடித்தல் சினத்தின் அறிகுறிகளாம். ‘ஏ’ ஈற்றசை.              67  |