2173. | ‘நீ இனம் இருந்தனை; யானும், நின்றனென்; “ஏ” எனும் மாத்திரத்து எற்றுகிற்றிலென்; ஆயவன் முனியும் என்று அஞ்சினேன் அலால், “தாய்” எனும் பெயர் எனைத் தடுக்கற் பாலதோ? |
நீ - (வரம் கொண்ட) நீயும்; இனம் இருந்தனை - இன்னமும் உயிரோடுஇருந்தாய்; யானும் நின்றனென் - யானும் உன்னெதிரில் சும்மா நின்று கொண்டுள்ளேன்;‘ஏ’ எனும் மாத்திரத்து - ‘ஏ’ என்று சொல்லக்கூடிய கால அளவுக்குள்; எற்றுகிற்றிலென் - (உன்னை) அடித்து வீழ்த்தவில்லை; (இதற்குக் காரணம்) ஆயவன்முனியும் என்று அஞ்சினேன் - (உலகுக்கெல்லாம்) தாய் போன்ற இராமன் கோபிப்பான் என்றுகருதிப் பயந்தேன்; அலால் - அல்லாமல்; ‘தாய்’ எனும் பெயர் - உனக்கு என்னுடைய தாய் என்று ஒரு பெயர் உள்ளதே அது; எனைத் தடுக்கற் பாலதோ - என்னை(உன்னை அடித்து வீழ்த்தாமல்) தடுக்க வல்லமை உடையதோ?’ நீ பிழை செய்தாய்; உன்னைத்தண்டிக்க வேண்டியவன் யான்; அப்படியிருந்தும் உன்னைத்தண்டியாதது ‘தாய்’ என்பதால் அன்று, இராமனுக்கு அஞ்சியே ஆகும்; ஆகவே, எந்த இராமனைக் காட்டிற்கு அனுப்பினாயோ அவனால் தான் இன்று நீஉயிரோடிருக்கின்றாய் என்றான் பரதன். ‘தாய் எனும் பெயர்’ என்றது தாய் என்பது உனக்குப்பெயரளவில் தான் பொருந்தும்; பொருள் அளவில் அச்சொல்லுக்கு நீ சிறிதும் தகுதியற்றவள்.சொற்கள் பொருள் உணர்த்தும் வழிதான் ஆற்றல் உடையன; பொருள் உணர்த்தாத வழி ஆற்றல்அற்றன. எனவே, உனக்குரிய ‘தாய்’ என்பதும் எனைத் தடுக்கும் ஆற்றல் உடையதன்று என்பதும் ஒருகருத்து. ‘ஓ’ வினாப்பொருட்டு. 72 |