2179. | ‘இறந்தான் தந்தை, “ஈந்த வரத்துக்கு இழிவு” என்னா, “அறந்தான் ஈது” என்று, அன்னவன் மைந்தன், அரசு எல்லாம் துறந்தான்; “தாயின் சூழ்ச்சியின், ஞாலம், அவனோடும் பிறந்தான், ஆண்டான்” என்னும் இது, என்னால் பெறலாமே? |
‘தந்தை - தயரதன் என்கிற தகப்பன்; “ஈந்தவரத்துக்கு இழிவு” என்னா - தான் முன் கொடுத்த வரத்துக்கு இழிவு நேர்ந்து விடுமோ (உயிரோடு இருந்தால்) என்று கருதி; இறந்தான் - உயிரொழிந்தான்; அன்னவன் மைந்தன்- அந்தத் தந்தையின் புதல்வன்; ஈது அறந்தான் என்று - இதுவே அறநெறியாகும் என்றுகருதி; அரசு எல்லாம் துறந்தான்- அரசை முற்றும் வேண்டாம் என்று காடு சென்றான்;(இவ்வாறு இருவரும் உலகம் போற்றும் செயலில் தலைநிற்க); அவனோடும் பிறந்தான் -அந்த இராமனோடு உடன் பிறந்தவனாகிய பரதன்; தாயின் சூழ்ச்சியின் - தன் தாய்செய்த சூழ்ச்சியால்; ஞாலம் ஆண்டான் என்னும் இது - உலகத்தை எல்லாம் ஆண்டான்என்கின்ற இப்பழிச்சொல்; என்னால் பெறல் ஆமே - என்னால் பெறுதற்குப்பொருந்துமோ?’ கொடுத்த வரத்தை நிலைநிறுத்த இறந்தான் தந்தை; தந்தை சொல்லைக் காப்பாற்ற அரசுதுறந்து வனம் புகுந்தான் மகன். உடன் பிறந்தவன் அரசைக் கைப்பற்றி ஆண்டான் என்னும் பழிநான் பெறுதற்குரியதோ? அதையன்றோ நீ செய்தாய் என்றாளாம். 78 |