2180. | ‘“மாளும்” என்றே தந்தையை உன்னான்; வசை கொண்டாள் கோளும் என்னாலே எனல் கொண்டான்; அது அன்றேல். மீளும் அன்றே? என்னையும், “மெய்யே உலகு எல்லாம் ஆளும்” என்றே போயினன் அன்றோ?- அரசு ஆள்வான். |
‘அரசு ஆள்வான்-அரசாட்சியைச் செய்தற்கு உரிய முறையுடைய இராமன்; “மாளும்” என்றே தந்தையை உன்னான் -(தான் காட்டிற்குச்சென்றால்) இறந்துபடுவான் தந்தை என்று கருதவில்லை; வசைகொண்டாள் -பழிச்சொல்லைக் கொண்டவளாயகைகேயியின்; கோளும் - மாறுபட்ட எண்ணமும்; என்னாலே-பரதனாகிய என் தூண்டுதலினாலேயே விளைந்தது; எனல்- என்றுகருதுதலை; கொண்டான்- உடையன் ஆனான்; என்னையும் -; “மெய்யே- உண்மையாக (உறுதியாக) உலகு எல்லாம்ஆளும்” - உலகையெல்லாம் (இப்பரதன்) ஆள்வான்; என்றே போயினன் அன்றோ - என்றுகருதியே(தந்தை இறப்பவும் பொருட்படுத்தாது) காட்டிற்குப் போனான் அல்லவா?; அது அன்றேல்- அப்படி இராமன் கருதவில்லையேல்; மீளும் அன்றே - அந்தை இறந்தவுடன் திரும்பி வந்திருப்பான்அல்லவா?;’ தந்தையின் வாக்கைக் காப்பாற்றக் காடு சென்ற இராமனைப் பரதன் சந்தேகிக்கிறான்என்பதன்று; தன்னுடைய துன்ப மிகுதியால் “இப்படியோ, அப்படியோ” என்று தன்மேல் பழியைப்போட்டுக்கொண்டு பலவாறு நினைக்கின்றான் என்பதே இத்தகைய இடங்களில் பொருளாகும். அரசுக்கு உரியவனும், இனி எதிர்காலத்தில் ஆள்பவனும், இராமன் என்பதில் பரதனுக்கு மாறாத உறுதிஇருப்பதால் ‘அரசு ஆள்வான்” என்றே இராமனைக் கூறினான்பரதன். 79 |