பரதன் கோசலையின் திருவடி வணங்கச் செல்லுதல் கலிவிருத்தம் 2189. | இன்னணம், இனையன இயம்பி, ‘யானும், இப் பன்ன அருங் கொடு மனப் பாவிபாடு இரேன்; துன்ன அருந் துயர் கெட, தூய கோசலை பொன் அடி தொழுவேன்’ என்று, எழுந்து போயினான். |
இனையன - இத்தகைய சொற்களை (பரதன்); இன்னணம் இயம்பி - இவ்வாறுவிளங்கவுரைத்து; ‘யானும் -; இப்பன்ன அருங் கொடு மனப் பாவிபாடு இரேன் - இந்தப்பேசுதற்கு முடியாத கொடிய மனம்படைத்த பாவியாகிய கைகேயியின் பக்கலில் இனி இருக்க மாட்டேன்;துன்ன அருந்துயர் கெட - நெருங்குதற்கரிய துன்பம் நீங்க; தூய கோசலை - நன்மனம் படைத்த கோசலைத் தாயின்; பொன் அடி தொழுவேன் - பொலிவு நிறைந்ததிருவடிகளை வணங்குவேன்;’ என்று - என்ற சொல்லி; எழுந்து போயினான்-கைகேயியின் இடத்திலிருந்த புறப்பட்டுச் சென்றான். வான்மீகத்தில் - பரதனது புலம்பல் ஒலியைக் கேட்டுக் கோசலை, சுமித்திரைபால் ‘மகா’புத்திமானாகிய பரதன் வந்திருத்தலால் அவனைக் காண விரும்புகிறேன்’ என்று சொல்லிச்சுமித்திரையுடன் பரதன் இருக்குமிடத்திற்குப் புறப்பட்டனன். அப்போது பரதன் சத்துருக்கனனுடன் கோசலை இருக்கும் வீட்டிற்கு வந்தான் என்றுள்ளது. 88 |