219.‘வானமே அனையது ஓர்
     கருணை மாண்பு அலால்
ஊனம் வேறு இலானுடன்,
     உலகம், யாவையும்,
கானமே புகும்எனின்,
     காதல் மைந்தனும்
தானுமே ஆளும்கொல் தரை?’
     என்றார் சிலர்.

     ஊனம் வேறு இலான் - இராமன்.  இராமனுடன் அனைவரும் காடு
சென்றால் கைகேயியும்,பரதனுமே ஆள்வார்களோ இப்பூமியை என்பது
மக்கள் கூற்று,.                                            191-1