2192. | ‘அடித்தலம் கண்டிலென் யான், என் ஐயனை; படித்தலம் காவலன், பெயரற்பாலனோ? பிடித்திலிர் போலும் நீர்; பிழைத்திரால்’ எனும் - பொடித் தலம் தோற் உறப் புரண்டு சோர்கின்றாள். |
தலம்பொடி தோள் உறப் புரண்டு சோர்கின்றான் - மண்ணில் உள்ள புழுதிதன்தோளிற் படும்படி நிலத்திற் புரண்டு மனம் சோர்ந்தவனாகி; ‘யான் -; என் ஐயனை- என் தலைவனாகிய இராமனது; அடித்தலம் - திருவடியை; கண்டிலென் - காணப்பெறவில்லை;படித்தலம்காவலன் - இப்பூமியாகிய இடத்துக்கு அரசனாகிய இராமன்; பெயரற்பாலனோ?- இக்கோசல நாட்டைவிட்டுப் பெயர்ந்து செல்லும் தன்மை உடையனோ; நீர்- (அன்னையாகிய) நீர் (ஆற்றாமையால்); பிடித்திலிர்போலும் - (அவன் கானகம்செல்லும்போது) தடுத்தல்செய்து பிடித்து வைத்துக் கொள்கிலிர்; பிழைத்திர் - பிழை செய்துவிட்டீர்;’ எனும்- என்று சொல்வானாயினன். இராமனே அரசன் என்பதைக் கோசலைக்கு உறுதிப்படுத்தம் முகமாக, ‘படித்தலம் காவலன்’ என்றுஇராமனைக் குறிப்பிட்டான். ‘பிழைத்திர்’ என்பதற்கு ‘உம்மால் இனி உயிர் வாழ இயலுமோ’என்று கோசலையைக் கேட்டதாகவும் கொள்ளலாம். ‘ஆல்’ அசை. 91 |