2201.“தழைத்த தண் துளவினோன்
     தலைவன் அல்லன்” என்று
அழைத்தவன், அறநெறி
     அந்தணாளரில்
பிழைத்தவன், பிழைப்பு இலா
     மறையைப் பேணலாது,
”இழைத்த வன் பொய்” எனும்
     இழுதை நெஞ்சினோன்.

   “தழைத்த-செழித்துள்ள; தண் துளவினோன்- குளிர்ச்சிபொருந்திய
திருத்துழாய் மாலையைச்சூடியுள்ள திருமால்; தலைவன் அல்லன்”-
பரம்பொருள் அல்லன்; என்று அழைத்தவன் -என்று சொல்லியவன்;
அறநெறி - தரும வழியில் நடக்கின்ற; அந்தணாளரில்பிழைத்தவன்-
அந்தணாளர் திறத்தில் பிழைசெய்தவன்; பிழைப்பு இலாஇறையைப்
பேணலாது
- ஒரு சிறிதும் குற்றம் இல்லாத இறைவன் அருளிய வேதத்தை
நன்கு வழிபட்டுப் பாதுகாவாது;  “இழைத்த
வன்பொய்” -ஒருவர்
செய்துவைத்த பொய்யுரை; எனும் இழுதை நெஞ்சினோன் -என்று
சொல்லும்பேய்மனம் படைத்தவன்....

     ‘திருமாலே பரம்பொருள்’ என்னும் கருத்தை நிலைநிறுத்தப் பரதன்
சபதத்தில் அதனையும்ஒன்றாக்கினார் போலும். வேதம் ஒருவனால்
உண்டாக்கப்பட்டதன்று; ‘அபௌருஷேயம்’ என்பர்வடநூலார்; இறைவே
அருளியது. அதைப் பொய் என்பவன் பேய் என்றார். “உலகத்தார்
உண்டென்பதில்லென்பான் வையத்தலகையா வைக்கப்படும்” (குறள் 850)
என்பதும் இக்கருத்தினதாதல் அறிக.                             100