2205.‘அந்தணர் உறையுளை
     அனலி ஊட்டினோன்.
மைந்தரைக் கொன்றுளோன்,
     வழக்கில் பொய்த்துளோன்,
நிந்தனை தேவரை
     நிகழ்த்தினோன், புகும்
வெந் துயர் நரகத்து
     வீழ்க, யானுமே.

    ‘அந்தணர் உறையுளை அனலி ஊட்டினோன்- வேதம் வல்ல
மறையோர் வசிக்கின்ற இடத்தை நெருப்பை உண்ணும்படி செய்தவன் (தீ
வைத்தவன்);மைந்தரைக் கொன்றுளோன் - சிறுவரைக் கொன்றவன்;
வழக்கில் பொய்த்துளோன் -(இருவர் வழக்குத் தம்மிடம் நியாயத்துக்கு
வந்தவழி) வழக்கில் பொய்த்தீர்ப்புச் செய்தவன்;தேவரை நிந்தனை
நிகழ்த்தினோன்
- தெய்வங்களை வைது  உரைத்தவன் (ஆகிய இவர்);
புகும் வெந்துயர் நரகத்து யான் வீழ்க - செல்லும் அக் கொடிய
துன்பத்தைத் தரும்நரகத்தில் யான் வீழ்வேனாக.’

     வாழும் இடத்துக்குத் தீவைத்தலே பாதகம். அதன் மேலும்அந்தணர்
வசிக்கும் இடத்துக்கும் தீ வைத்தல்மாபாதகம். சிறுவரைக் கொல்லுதல்;
பெற்றபிள்ளைகளைக் கொல்லுதலும் ஆம்..பொய்க்கரி கூறினோன் என்று
முன்னர் வந்ததுசாட்சியாளர்க்கு; இது நடுவர்க்கு; இனி வாதி, பிரதிவாதி
இருவருள் ஒருவர் பொத்தலும் இங்கே கொள்ளலாம். ‘யானும்’ என்ற உம்மை
எச்ச உம்மை.                                                104