2209. | ‘அழிவு அரும் அரசியல் எய்தி, ஆகும் என்று, இழி வரு சிறு தொழில் இயற்றி, ஆண்டு, தன் வழி வரு தருமத்தை மறந்து, மற்று ஒரு பழி வரு நெறி படர் பதகன் ஆக, யான். |
‘அழிவு அரும் அரசியல் எய்தி- கெடுதல் இல்லாத அரசாட்சியை அடைந்து’ ஆகும் என்று - (எனக்கு) எதுவும் செய்ய இயலும்என்று கருதி; ஆண்டு - அரசாட்சி நடத்தி; தன் வழிவரு தருமத்தை மறந்து - தன்னுடைய பாரம்பரியமான குலதருமத்தை மறந்து (கை விட்டு); மற்று - வேறாகிய; ஒருபழிவரு நெறி - தனக்குப் பழி வந்து சேரக் கூடிய வழியில்; படர் - விரித்துசெல்கின்ற; பதகன் - பாவியாக; யான் ஆக - யான் ஆவேனாக.’ அரசேற்றவன் அறவழியில் நடக்க வேண்டும்; வேறு வழியில் சென்றால் பாவியாகிறான்; அவனைப்போல நானும் ஆவேனாக என்று பரதன் சூளுரை செய்தான். 108 |