பரதன் வசிட்டனை வணங்கலும்வசிட்டன் தழுவி அழுதலும் 2222. | வந்த மாதவன் தாளில், வள்ளல் வீழ்ந்து, ‘எந்தை யாண்டையான்? இயம்புவீர்?’ எனா, நொந்து மாழ்கினான்; நுவல்வது ஓர்கிலா அந்த மா தவன் அழுது புல்லினான். * |
வள்ளல்- பரதன்; வந்த மா தவன் தாளில் வீழ்ந்து- அங்கே வந்தவசிட்ட முனிவன் திருவடிகளில் விழுந்து; ‘எந்தை யாண்டையான்- என் தந்தையாகியதசரதன், எவ்விடத்தான்?; இயம்புவீர்- சொல்வீராக?;’ எனா - என்று; நொந்துமாழ்கினான் - மனம் கெட்டு மயங்கினான்; நுவல்வது ஓர்கிலா அந்த மாதவன் - சொல்வதற்குவகையறியாத அந்த வசிட்டனும்; அழுது புல்லினான் - பரதனைத்தழுவி அழுதான். “எந்தை யாண்டையான்” தசரதனைப் பற்றிய வினாவாதல் அன்றி இராமனைப் பற்றியவினாவாகவும் அமையும். “எந்தையும்...இராமன்” (2159) என்று பரதன் முற்கூறினனாதலின் ‘இராமன்எவ்விடத்தான்’ என வினாவினன் எனலும் ஆகும். அதற்கும் முனிவன் பதில் உரைக்கமாட்டுகின்றிலன். 121 |