தயரதன் உடலை விமானத்தில் வைத்து, யானைமேல் கொண்டு செல்லுதல்  

2226.பற்றி, அவ்வயின் பரிவின் வாங்கினார்,
சுற்றும் நான்மறைத் துறை செய் கேள்வியார்;
கொள்ள மண்கணை குமுற, மன்னனை,
மற்று ஓர் பொன்னின் மா மானம் எற்றினார்.

   நான் மறைத்துறை செய் கேள்வியார்-நான்கு வேதங்களின்
துறைகளிலும் பரந்து சென்ற கேள்வியறிவினை உடையவராய அந்தணர்;

பரிவின்-(மனத்தின்கண் நிகழும்) அன்பிரக்கத்தோடு; மன்னனை-தயரத
மன்னனது  உடலை;  அவ்வயின் - அஃதுள்ள இடத்தினின்றும்; சுற்றும்
பற்றிவாங்கினார்
- நாற்பக்கமும் இருந்து தம் கையாற் பற்றி எடுத்து;
கொற்ற மண்கணை குமுற- வெற்றி தரும் வீரமுரசம்பேரொலி செய்ய;
மற்று ஓர் பொன்னின் மா மானம் ஏற்றினார்-வேறொரு
பொன்னாலியன்ற பெரிய விமானத்தில் எற்றினர்.

     வேதம் எழுதாக் கிளவியாதலின் கற்றார் என்னாது கேள்வியார்
என்றார். உடலை எடுத்தல், ஏற்றுதல் ஆகிய அனைத்திற்கும் மந்திரமும்,
தந்திரமும் உண்டாதலின் விமானம் ஏற்றுதலைஅந்தணர் மேற்றாக்கினார்.
                                                           125