தயரதன் உடலம் சரயு நதி அடைதல்  

2229. மாவும், யானையும், வயங்கு தேர்களும்,
கோவும், நான் மறைக் குழுவும், முன் செல,
தேவிமாரொடும் கொண்டு, தெண் திரை
தாவு வார் புனல் சரயு எய்தினார்.

     மாவும் - குதிரைகளும்;  யானையும் - யானைகளும்;  வயங்கு -
விளங்குகின்ற;  தேர்களும் -;  கோவும் - அரசர்களும்;  நான்மறைக்
குழுவும் -நான்மறையாளர் கூட்டமும்; முன்செல - முன்னே செல்ல;
கொண்டு - (தயரதனதுபிரேதத்தைக்) கொண்டுசென்று; தேவிமாரொடும் -
(தயரதன்) மனைவிமாருடனே;  தெண்திரைதாவு - தெள்ளிய அலைகள்
தாவுகின்ற;  வார் புனல் - மிக்க தண்ணீரை உடைய;  சரயுஎய்தினார் -
சரயு நதியை அடைந்தார்கள்.

     தேவிமார் அறுபதினாயிரவர். “தேவிமாரை இவற்குரிமை செய்யும்
நாளில் செந்தழலில், ஆவிநீத்திர் என இருத்தி” (1915.) என்பது காண்க. 128