வசிட்டன் சத்துருக்கனனைக் கொண்டு இறுதிக்கடன் செய்வித்தல். 2237. | என்று கூறி நொந்து இடரின் மூழ்கும் அத் துன்று தாரவற்கு இளைய தோன்றலால், அன்று நேர் கடன் அமைவது ஆக்கினான் - நின்று நான்மறை நெறி செய் நீர்மையான். |
நான்மறை நெறி நின்று- நால் வேத வழியில் தான் நிலை பெற்று நின்று; செய் நீர்மையான் - (அவ்வேதவழியிலே) எல்லாவற்றையும் (குறையறச்) செய்கின்ற தன்மை உடையவனாகிய வசிட்டன்; என்றுகூறி -; நொந்து இடரின் மூழ்குறும் - மனம் வருந்தித் துயரில் மூழ்கியுள்ள; அத்துன்றுதாரவற்கு - அந்த நெருங்கிய மாலை அணிந்துள்ள பரதனுக்கு; இளைய தோன்றலால் -பின்பிறத்த தம்பியாகிய சத்துக்கனனால்; அன்று - அப்பொழுது; நேர் -தயரதனுக்குச் செய்ய வேண்டிய; கடன் - இறுதிச் சடங்குகளை; அமைவது ஆக்கினான்- பொருந்துவதாகச் செய்து முடித்தான். ‘தாரவன்’ - என்பது அரசகுலத்தான் என்பதால் சொல்லப்பெற்றது. இங்குத் தார்அணிந்திருந்தான் எனல் வேண்டுவதின்று; துக்கச் செயல்கள் நிகழ்கிறதாகலின்; அணிந்திருந்ததாரைக் கழற்றி எறிவதும், எறியாமையும் ஆகிய எவற்றையும் சிந்திக்காத மனநிலை பரதனதுஅப்போதயை நிலை. 136 |