2239. | அங்கி நீரினும் குளிர, அம்புயத் திங்கள் வாள் முகம் திரு விளங்குற, சங்கை தீர்ந்து, தம் கணவர் பின் செலும் நங்கைமார்புகும் உலகம் நண்ணினார். |
அம்புயத் திங்கள் வாள்முகம் திரு விவளங்குற- தாமரையும், சந்திரனும் போலும் ஒளிபடைத்த திருமுகம் மேலும் திருமகளின் மலர்ச்சி பொருந்தியதாக; அங்கி நீரினும் குளிர - (தம் கணவன் மேனியைத் தழுவியதாகியபாவனையால் தாம் தழுவிய) நெருப்பு நீரைக்காட்டிலும் குளிர்ந்து தோன்ற; சங்கை தீர்ந்து- மனத்துயர் நீங்கி; தம் கணவர் பின் செலும் நங்கைமார் புகும் உலகம் - தம்கணவருடன் இறந்து பின் செல்லும் கற்புடை மகளிர் எய்தும் நல்லுலகத்தை; நண்ணினார்-இவர்களும் அடைந்தார்கள். அங்கி குளிர்தல் கற்புடை இவர்களுக்கே; அன்றி நெருப்பின் சுடுதல் தன்மைமாறியதன்று. 138 |