ஈமக்கடன் முடித்த பரதன் மனை சேர்தல் 2240. | அனைய மா தவன், அரசர் கோமகற்கு இனைய தன்மையால் இயைவ செய்த பின், மனையின் எய்தினான் - மரபின் வாழ்வினை வினையின் எய்தும் ஓர் பிணியின் வேலையான். |
அனைய மா தவன்- அப்பபடிப்பட்ட பெரிய தவத்திற் சிறந்தவனாகிய வசிட்டன்; அரசர் கோமகற்கு -சக்கரவர்த்தியாகிய தயரதனுக்கு; இனைய தன்மையால் - (நான்மறை வழியில்சத்துருக்கனன் மூலமாக) இப்படி; இயைவ செய்தபின் - செய்ய வேண்டிய ஈமச் சடங்குகளைச்செய்து முடித்த பிறகு; மரபின் வாழ்வினை - அரசகுலத்துக் குரிய அரசச் செல்வத்தை; வினையின் எய்தும் - (தாய் செய்த ) தீய செயலால் பெற்ற (தனால் உண்டாகிய); ஓர்பிணியின் வேலையான் - ஒரு நோய்க் கடலில் கிடக்கின்ற பரதன்; மனையின் எய்தினான்- அரண்மனைக்கண் வந்து சேர்ந்தான். வசிட்டன் செய்துமுடித்தபிறகு, பரதன் அரண்மனை அடைந்தான் என முடிக்க. மரபு -பரம்பரை; இங்கே அரச பரம்பரை - அதற்குரிய வாழ்வு அரசுச் செல்வம்-‘வினை’ என்பது நன்மை தீமை இரண்டையும் குறிக்கும். ஆயினும், தீமையையேபெரும்பாலும் குறித்துநிற்றல் வழக்கு நோக்கி உணர்க. ‘ஈன்ற தாய்வினை செய்ய அன்றோகொன்றனன் தவத்தின் மிக்கான்’ என்று (7415) பின்னும் இப்பொருளில் பயின்றுள்ளது காண்க. 139 |