பத்து நாள்கள் சடங்குகள் நடைபெறல் 2241. | ஐந்தும் ஐந்தும் நாள் ஊழி ஆம் என, மைந்தன், வெந் துயர்க் கடலின் வைகினான்; தந்தை தன்வயின் தருமம் யாவையும், முந்தை நூலுளோர் முறையின் முற்றினான். |
மைந்தன் - பரதன்; ஐந்தும் ஐந்தும் நாள்- பத்து நாள்களும்; ஊழி ஆம் என - ஒரு யுகக்காலம் போலத் தோன்ற; வெம் துயர்க் கடலின் வைகினான் - கொடியதுன்பக் கடலில் கிடந்து; தந்தை தன்வயின் - தந்தையிடத்து; தருமம் யாவையும் -செய்யக் வேண்டிய இயல்புகள் (சடங்குகள்) எல்லாவற்றையும்; முந்தை நூலுளோர் முறையின் - முன்னோர் கூறிய ஒழுக்க நூல்களிற் கண்டுள்ள முறைப்படியே; முற்றினான் - செய்து முடித்தான். சத்துருக்கனனைக் கொண்டு செய்து முடித்தான் என்பது கருத்து. தலைமை பரதன் மேற்றாதலின்மைந்தன் என்றது பரதனையே குறிக்கும்; தந்தைக்குரிய கடன்களைச் சத்துருக்கனன் செய்தான்ஆயினும், பரதன் தானே தன்பொருட்டு ஆற்றவேண்டிய நீர்க்கடன் முதலியவற்றை ஆற்றினான்என்றலும் ஒன்று. 140 |