சுமந்திரன் குறிப்பை முனிவன் உணர்தல் 2247. | நோக்கினால் சுமந்திரன் நுவலலுற்றதை, வாக்கினால் அன்றியே உண்ர்ந்த மா தவன், ‘காக்குதி உலகம்; நின் கடன் அது ஆம்’ எனக் கோக் குமரனுக்கு அது தெரியக் கூறுவான்; |
சுமந்திரன் -; நோக்கினால் - மனத்தொடு பட்ட பார்வைக் குறிப்பினால்; நுவலலுற்றதை - சொல்லியதை; வாக்கினால் அன்றியே - (அவன்) வாயினாற்சொல்லாமலே; உணர்ந்த - தெரிந்துகொண்ட; மா தவன் - பெருந்தவம் செய்த வசிட்டமுனிவன்; ‘உலகம் காக்குதி - இந்த அரசாட்சியைப்பாதுகாப்பாய்; இது - இத்தரணி தாங்குதல்; நின் கடன் ஆம் - நீ (எற்றுச்)செய்யவேண்டிய கடமையாகும்; என -; கோக் குமரனுக்கு - அரச குமாரனாகிய பரதனுக்கு; அது - அரசின் சிறப்பும் இன்றியமையாமையும; தெரிய - விளங்கும்படி; கூறுவான்- எடுத்துரைக்கலானான். ‘நோக்கு’ என்பது வெறும் பார்வையன்று; ‘மனத்தால் நோக்குத’ லாகும். இதனை ‘இரண்டன்மருங்கின் நோக்கல் நோக்கம்’ என்னும் தொல்காப்பியச் சூத்திரத்துக்குச் சேனாவரையர்எழுதிய உரையான் உணர்க். (தொல். சொல். வேற். மயங்.) மந்திராலோசனையில் முதற்கண்அமைச்சர் தொடங்கலே முறை என்பது இதனால் அறியப்பெறும். 4 |