2251. | ‘தேவர்தம் உலகினும், தீமை செய்து உழல் மா வலி அவுணர்கள் வைகும் நாட்டினும், ஏவெவை உலகம் என்று இசைக்கும் அன்னவை காவல் செய் தலைவரை இன்மை கண்டிலம். |
‘தேவர்தம்உலகினும் - தேவலோகத்திலும்; தீமை செய்துஉழல்- பிறர்க்குத் தீமையே செய்து திரிகின்ற; மா வலி அவுணர்கள்வைகும் நாட்டினும்-பெருவலி படைத்த அசுரர்கள் தங்கியுள்ள நாடுகளிலும்; ஏஎவை உலகம் என்று இசைக்கும்அன்னவை - எவை எவைகள் உலகம் என்று பெயர்பெறுமோ அவைகள் எல்லாம்; காவல் செய் தலைவரை இன்மை - தம்மைக் காக்கின்ற அரசர்கள் இல்லாமல் இருத்தலை; கண்டிலம்- (யாம்) பார்த்திலோம்.’ நல்லோராயினும், அல்லோராயினும் நாட்டிற்கு ஆள்வோர் இன்றியமையாதவர் என்பது இதனாற்கூறியதாம். உலகம் என்றாலே அரசன் வேண்டும் என்றார். 8 |