2253.‘பூத்த, நாள்மலர் அயன் முதல புண்ணியர்
ஏத்து, வான் புகழினர், இன்றுகாறும் கூக்
காத்தனர்; பின், ஒரு களைகண் இன்மையால்,
நீத்த நீர் உடை கல நீரது ஆகுமால்.

     ‘பூத்த- (திருமாலின் திருஉத்தியில்) உண்டான; நாள்மலர்-
அன்றலர்ந்தாற் போன்ற தாமரை மலரில் தோன்றிய; அயன்முதல
புண்ணியர்
- பிரமதேவன்முதலிய மேலோர்களால்; ஏத்து -பாராட்டப்
பெறுகின்ற; வான் புகழினர் -சிறந்த புகழைப்பெற்ற (உன்) முன்னோர்கள்;
இன்றுகாறும் - இன்று வரையிலும்; கூ -(இந்தப்) பூமியை;  காத்தனர் -
(அரசு நடத்திக்) காத்தார்கள்; பின் -இப்போது;ஒரு களைகண்
இன்மையால்
- (நீ அரசன் ஆகாதபடியால்) தமக்கொரு துன்பம் நீக்கிப்
பாதுகாப்பாரை  இல்லாமையால்; (இவ்வுலகம்) நீத்த நீர்- கடலின்கண்;
உடைகல நீரது - உடைந்த கப்பல் தத்தளிப்பதுபோன்றது; ஆகும் -.’

     ‘நீத்த’ம் என்பது வெள்ளம் ஆதலின், நீர் நீத்தம் எனவே ‘கடல்’
என்று பொருள்ஆயிற்று. கடலின்கண் உடைந்த கப்பல் தவிப்பதைப்போல
அரசன் இல்லாத நாடு அலமரும் என்றதாம்.‘ஆல்’ அசை.             10